Tuesday, August 23, 2011


2010 11ம் கல்வியாண்டில் தேர்வான 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!


பதிவு செய்த நாள்   : 8/22/2011 16:6:26

சென்னை: சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடந்தது.  இதுசம்பந்தமாக, தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் தகுதியும் திறமையும் மிக்க ஆசிரியர்கள் 20112012ம் ஆண்டு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன்படி 1 முதல் 5ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள் 6 முதல் 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், 11, 12ம் வகுப்புகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் இந்த கல்வியாண்டில் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 20102011ம் கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,665 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மேலும், 45 சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களும் 161 பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களும் 139 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் விரைவில் நிரப்பபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment