Monday, December 12, 2011


பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்




திருச்சி, டிச.12-


பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாநில செயற்குழு கூட்டம்


தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கி.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பி.டி.மனோகரன், இணை செயலாளர் மணி, அமைப்பு செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


இரட்டை தேர்வுமுÛ
தமிழக அரசு தற்போது பட்டதாரி ஆசிரியர் நியமன தகுதி தேர்வு மற்றும் போட்டி தேர்வு ஆகிய இரட்டை தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இரட்டை தேர்வு முறை அறிவித்த அதிர்ச்சியால் மரணம் அடைந்த நாமக்கல் பரமத்தியை சேர்ந்த பத்மநாபன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது,


தற்போது தேர்வு செய்யப்பட்ட 4,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.


முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 13 ஆயிரத்து 36 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் அனைத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றும் முறையிலேயே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.


போராட்டம்


தமிழக அரசு உடனடியாக இரட்டை தேர்வு முறையை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது, சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவோடு மாபெரும் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் மாவட்ட தலைவர் அரசமணி வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்
பாளர்கள் ரத்தினவேல், ராமதாஸ், சொக்கலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆசிரியர் சங்க தலைவர் முத்துராஜா, மாநில ஆலோசகர் அன்பரசு, தமிழாசிரியர் சங்க தலைவர் ராமு, மாவட்ட செயலாளர் எம்.மணி, பொருளாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment